தென்னிலங்கையை உலுக்கிய மர்ம மரணம் : இளைஞர்கள் இருவரின் சடலம் மீட்பு!!

308

தென்னிலங்கையை உலுக்கிய மர்ம மரணம்

தென்னிலங்கையில் இரு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாத்தறை வெலிகம, தெனிபிட்டிய பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பணியிடத்திலேயே குறித்த இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பணியிடத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நீர் நிறைந்த குழி ஒன்றில் விழுந்தே இந்த இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இடத்தில் கட்டடம் நிர்மாணிப்பதற்கு கொன்க்ரீட் தூண்களுக்காக வெட்டப்படும் குழிக்குள் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.