வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் 2012, 2013ம் ஆண்டுகளில் இடமாற்றலாகிச் சென்ற ஆசிரியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும், சேவை பாராட்டு நிகழ்வும் கடந்த 7ம் திகதி பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர் திரு.தர்மரட்ணம் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வின் போது கடந்த இரு ஆண்டுகளில் இடமாற்றலாகிச் சென்ற ஆசிரியர்களின் சேவையை பாராட்டியதுடன் அவர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டன.
கடந்த பல வருடங்களாக நடைபெறாதிருந்த இன் நிகழ்வு பாடசாலை அதிபரினதும் ஆசிரியர்களினதும் முயற்சியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.