யாழில் சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு நேர்ந்த கதி!!

426

பாலியல் துஷ்பிரயோகம்

யாழ். சுன்னாகம் பகுதியில் 14 வயது சிறுமியை காதலிப்பதாக தெரிவித்து பாலியில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமி காணாமல் போயுள்ள நிலையில் அவரது தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சிறுமி மறுநாள் கண்டுப்பிடிக்கப்பட்டதையடுத்து அவரது தாயார் பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளார்.

இதன்போது 17 வயது இளைஞன் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிஸார் இளைஞரை கைது செய்துள்ளனர்.

இதே போல் கடந்த 24ஆம் திகதியும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 13 வயதுச் சிறுமி உறவினர் வீட்டுக்குச் சென்று இரவு தாமதாகி வந்துள்ளார். இந்நிலையில் தாயார் சிறுமியிடம் விசாரித்த போது 18 வயதான சுன்னாத்தை சேர்ந்த இளைஞன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்திற்கு அமைய 18 வயதுடைய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதே­வேளை, குறித்த 13 வயதுடைய சிறுமியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 21 வயதுடைய சுன்னாகத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை தெரிய வந்துள்ளது.

பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்துள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.