வான் – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து : இளைஞர் பரிதாபமாக பலி!!

478

இளைஞர் பரிதாபமாக பலி

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

வான் ஒன்றும் – மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் சீனக்குடா – நாச்சிகுடா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதியை கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.