வேகத்தால் நேர்ந்த விபரீதம் : சம்பவ இடத்திலேயே இளைஞன் பலி : மூவர் கவலைக்கிடம்!!

293

கோரவிபத்து

மன்னாரில் இருந்து யாழ்பாணம் பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் பயனித்த இளைஞர் குழு எதிரில் வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

மன்னாரில் இருந்து இன்று (04.03.2019) திங்கட்கிழமை காலை மூன்று மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட இளைஞர் குழு யாழ்பாணம் நோக்கி பயணித்த வேளையில் பூநகரி பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் எதிரே வந்த உழவு இயந்திரத்தில் மோதியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயனித்த மன்னார் அடம்பன் பகுதியை சேர்ந்த ஜக்சன் எனும் இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். அதே நேரத்தில் பயணித்த 3 பேர் கவலைக்கிடமான நிலையில் யாழ்பாணம் வைத்திய சாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அணுமதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.