நள்ளிரவில் நடந்த ஆபாச விருந்து
மாத்தறையில் நடத்தப்பட்ட ஆபாச விருந்தில் கலந்து கொண்ட நடிகை உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் நண்பர்களுக்கு இடையில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் நடிகை ஒருவர் உட்பட 17 இளைஞர், யுவதிகள் மாத்தறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விருந்தில் கொக்கொய்ன் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய குழுவினரே மாத்தறை ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் ஊடாக தொடர்பை ஏற்படுத்தி கொண்ட இந்த குழுவினர் மிரிஸ்ஸ ஹோட்டலில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டிருந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரவு முழுவதும் இடம்பெற்ற இந்த விருந்தில் வெளிநாட்டவர்கள் உட்பட் 1500 இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டதாக தெரிய வருகிறது. இவர்களில் ஓய்வு பெறுவதற்காக வெளியில் வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் கொக்கொய்ன் போதைப்பொருளுடன் போதை மாத்திரை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் நடிகை உட்பட இளம் பெண்கள் போதையில் அரைநிர்வாணமாக இருந்தார்கள் என குறிப்பிடப்படுகின்றது. மாத்தறை, கொழும்பு, பாணந்துறை, கெசெல்வத்தை, ஜா-எல, மாபொல மற்றும் வத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபரகள் இன்றைய தினம் மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.








