பல்கலைக்கழக கட்டடத்திலிருந்து மாணவி ஒருவர் கீழே குதித்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த மாணவி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இன்று காலை 9.30 மணியளவில் இவர் பல்கலைக்கழக கட்டிடம் ஒன்றின் மூன்றாம் மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார்.
இம்மாணவி கீழே குதித்தமைக்கான காரணம் எதுவும் இதுவரையில் தெரியவரவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.