விபத்தில் ஒருவர் படுகாயம்
கிளிநொச்சி – கண்டாவளை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும், வாகனத்தின் சாரதியே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வாகனம் தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே குறித்த விபத்திற்கான காரணமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






