கிரிக்கெட் சூதாட்டத்தில் செக்ஸ் நடிகைகளிடம் சிக்கிய ஸ்ரீசாந்த் கதை திரைப்படமாகிறது!!

379

Srisanthநடிகைகள் வலையில் விழுந்து கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த் கதை படமாகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடந்த சூதாட்டம் பரபரப்பாக பேசப்பட்டது. இதில் ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஸ்ரீசாந்த்துக்கும் நடிகைகளுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது. நடிகை மூலமே சூதாட்டத்தில் மாட்டியதாக செய்தி வெளியானது. இதை மையமாக வைத்து இந்த படத்தை எடுக்கின்றனர்.

ஹோட்டல்களில் கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட மது விருந்துகள், அழகிகள் சப்ளை போன்றவற்றையும் இப்படத்தில் கொண்டு வருகின்றனர். கிரிக்கெட் சூதாட்ட மர்மங்கள் அனைத்தும் இந்த படம் மூலம் வெளிக்கொண்டு வரப்படும் என்று படத்தை இயக்கும் மதுரா ஸ்ரீதர் தெரிவித்தார்.

தெலுங்கு, தமிழ், மலையாள மொழிகளில் இந்த படத்தை எடுக்கின்றனர். கவர்ச்சி, திரில்லர், சூதாட்ட தரகர்களின் நிழல் உலக நடவடிக்கைகள் அனைத்தையும் இந்த படத்தில் கொண்டு வருகின்றனர்.