மகளுடன் சேர்ந்து தூக்கில் தொங்கிய தந்தை : அதிரவைக்கும் பின்னணி!!

324

தூக்கில் தொங்கிய தந்தை

இந்தியாவில் தந்தையும், மகளும் ஒன்றாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் லலித் பிரகாஷ் (63). இவருக்கு மனைவியும் நான்கு மகள்களும் உள்ளனர்.

இதில் முதல் இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மூன்றாவது மகள் திருமணமாகி விவாகரத்து பெற்றவராவார். இதையடுத்து பிரகாஷ், அவர் மனைவி, மூன்றாவது மகள் மற்றும் நான்காவது மகள் கிருத்திகா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று பிரகாஷின் மனைவி மற்றும் மூன்றாவது மகள் ஆகிய இருவரும் கோவிலுக்கு சென்றனர். அப்போது வீட்டில் இருந்த பிரகாஷ் மற்றும் அவரின் நான்காவது மகள் கிருத்திகா ஆகிய இருவரும் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதன்பின்னர் வீட்டுக்கு பிரகாஷின் மனைவி மற்றும் மகள் வந்தபோது இருவரும் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து இரண்டு சடலங்களையும் கைப்பற்றினார்கள். பொலிசார் நடத்திய விசாரணையில், பிரகாஷ் சில மாதங்களுக்கு முன்னர் அதிகளவில் பணத்தை சிலரிடம் கடன் வாங்கியுள்ளார்.

ஆனால் அதை அவரால் திரும்ப தரமுடியவில்லை. இதன் காரணமாக அவர் வீடு அடமானத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து அவர் மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் தான் இது தொடர்பாக அவருக்கும், கிருத்திகாவுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில் கிருத்திகா முதலில் தூக்கில் தொங்கினார், மகளின் முடிவை பார்த்து பிரகாஷும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் பிரகாஷின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தாரிடம் விசாரிக்கவுள்ளனர்.