முதல் 20-20 போட்டியில் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி!!

289


SLஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட ருவென்டி ருவென்டி தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஏஞ்சலோ மத்தியுசின் அதிரடி அரைச்சதத்துடன் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.



இலங்கை அணி சார்பில் மத்திவ்ஸ் 50 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. பாகிஸ்தான் அணி சார்பாக சஹிட் அப்ரிடி ஆட்டமிழக்காமல் 20 பந்துகளில் 39 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.



இரு அணிகளுக்கும் இடையிலான 2வது 20-20 போட்டி 13ம் திகதி நடைபெறவுள்ளது