மர்மமான முறையில் நபரொருவர் உயிரிழப்பு!!

300

நபரொருவர் உயிரிழப்பு

மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலமொன்று இன்று மதியம் முந்தளம் காவற்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தோட்டமொன்றில் காவலாளராக பணியாற்றி வந்த நபரொருவரின் சடலமொன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முந்தளம் காவற்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் 70 வயதுடைய முதியவர் என தெரிவிக்கப்படுகிறது. தான் தோட்டத்திற்கு வந்து பார்த்த போது காவலர் இல்லாததால் அவரை தேடிய போது காவலரண் கட்டிலில் உயிரிழந்த நிலையில் அவர் இருந்ததாக தோட்ட உரிமையாளர் காவற்துறையில் தெரிவித்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ள நிலையில் , முந்தளம் காவற்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.