வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி ஆரம்பப்பிரிவு மாணவர்களின் திறனாய்வுப் போட்டி!!

1157

திறனாய்வுப் போட்டி

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறவாய்வு இன்று(16.03) பிற்பகல் 2.30 மணியளவில் பாடசாலை அதிபர் அருட்சகோதரி எஸ்.ஜெபநாயகி தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

ஆரம்பப்பிரிவு மாணவர்களின் பாண்ட் அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டு ஆரம்ப நிகழ்வான தேசியக் கொடியேற்றல் இல்லக்கொடியேற்றல், சுடர் ஏற்றல், விளையாட்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தல் என்பன இடம்பெற்றதுடன் விளையாட்டில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ்களும், கேடயங்களையும் நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார், வடமாகாண கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான செயலாளருமான எஸ்.சந்திரகுமார், இறம்பைக்குளம் தூய அந்தோனியார் ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி எம்.ஜெயபாலன்,

பிரதி அதிபர், அயல் பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.