யாழ்ப்பாணத்தில் அதிரடிப் படையினரை தாக்கிய பெண்கள்!!

251

அதிரடிப் படையினரை தாக்கிய பெண்கள்

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்டு, அவர்களின் கடமைக்கு தடை ஏற்படுத்திய 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரியாலை பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு மேற்கொண்டவர்களை கைது செய்வதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். எனினும் , அவர்களின் கடமைக்கு தடை ஏற்படுத்திய சந்தேக நபர்கள் பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து பெண்கள் மூவர் உட்பட 5 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அரியாலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.