பரிதாபமாக பலியான பெண்
அளுத்கம – பாதகொட பகுதியில் முச்சக்கரவண்டியொன்றும், பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த யுவதியின் சகோதரர் காயமடைந்து நாகொட மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, அளுத்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.