வருடாந்தம் ஐவரை உயிர் பலியெடுக்கும் வளைவில் மேலும் ஒரு இளைஞன் பலி!!

270

இளைஞன் பலி

திஸ்ஸமஹாராம – கதிர்காமம் வீதியில் 7 ஆவது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக் ரக வாகனத்தில் உந்துருளி மோதி நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

திஸ்ஸமஹாராம – கொடிகஹாவெவ பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்து இடம்பெற்ற இடத்தில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

வருடத்தில் அந்த இடத்தில் மாத்திரம் 5 பேர் வரை உயிரிழப்பதாக அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே அந்த இடத்தை “உயிர் பலி வளைவு” என பிரதேவாசிகள் அழைக்கின்றனர்.