தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் அவைத் தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதன் 2018ம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இன்று வவுனியா கோதண்டர் நொச்சிகுளம் அ.த.க.பாடசாலைக்கு போட்டோபிரதி இயந்திரம்,
புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கு போட்டோபிரதி இயந்திரம், இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு பாண்ட் உபகரண தொகுதி, கந்தபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு அலுவலக தளபாடங்கள், கோவில்குஞ்சுக்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு அலுவலக தளபாடங்கள், கற்குழி ஞானம் முன்பள்ளிக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் என்பன வவுனியா மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர் து.நடராஜசிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் சந்திரபத்மன், வவுனியா நகரசபை உறுப்பினர் லக்ஸ்சனா நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தனர்.