வவுனியா இளைஞன் உட்பட நால்வர் கோர விபத்தில் பரிதாபமாகப் பலி!!

637

கோர விபத்து

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதில் வவுனியா தேக்கந்தோட்டத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மோகன்ராஜ் லக்ஸன் என்பவரும் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் நான்கு பேர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த டொயோட்டா ரக வேன் ஒன்று இன்று அதிகாலை 1.45 மணியளவில் புத்தளம் நாகவில்லு பகுதியில் வைத்து டிப்பர் லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சாரதி உட்பட 8 பேர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் டிப்பர் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.