தனியார் ஊழியர்களுக்கும் 2500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமா?

852

தனியார் ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு?

தனியார் துறையினருக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே இன்றைய தினம் சபையில் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளார்.

முன்வைக்கப்பட்டுள்ள இவ்வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான குழுநிலை விவாதத்தில கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் குறித்த பிரேரணையை முன்வைத்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொண்டுள்ளதாக மார்தட்டும் அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் தனியார் துறைக்கு எந்த சலுகையையும் வழங்கவில்லை.

அத்துடன் தொழில் அமைச்சு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சாக இருப்பதால் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.