பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சிறுவன்!!

508

சங்கிலியை அறுத்துச் சென்ற சிறுவன்

திருகோணமலை கந்தளாய் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சிறுவனை இன்று கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பேராறு,கந்தளாய் பகுதியைச் சேர்ந்த16 வயதுடைய சிறுவனே இவ்வாறு கைது செய்துள்ளனர்.

பேராறு பகுதியில் பெண்ணொருவர் கடைக்குச் சென்ற போது மோட்டார் சைக்கிளில் சென்று இரண்டு பவுணுடைய தங்கச் சங்கியை அறுத்துக்கொண்டு சென்ற போதே சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.