இரு வர்த்தகர்கள் கொலைச் சம்பவம் : 7 பொலிஸார் உட்பட எட்டுப் பேர் கைது!!

304

வர்த்தகர்கள் கொலை

காலி ரத்கம பிரதேசத்தில் வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர்கள் இருவர் உட்பட 7 பொலிஸ் அதிகாரிகளும் ஒரு வலஸ்முல்ல வனஜீவராசிகள் அதிகாரி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்று கைது செய்யப்பட்ட எட்டுப் பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.