வவுனியா உட்பட வடக்கில் நாளை ஹர்த்தாலா?

576

நாளை ஹர்த்தாலா?

இந்த இரண்டு வருடத்தில் அரசானது எந்தவித முன்னேற்றமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையில் இருபதுக்கும் மேற்பட்ட தாய்மார்கள் மரணத்தை தழுவியிருக்கின்றார்கள்.

எனவே இனிமேலும் கால அவகாசம் வழங்கப்படகூடாது என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். அத்துடன் எந்தவித தீர்வுகளும் கிடைக்காத நிலையில் நாளை 19 ஆம் திகதி மக்கள் எழுச்சிப் போராட்டம் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மதத்தலைவர்கள், பள்ளிவாசல்களின் ஒன்றியங்கள் என்பனவுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ள நிலையில் அவர்கள் தமது போராட்டத்திற்கான முழுமையான ஆதரவினை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

இந் நிலையில் 19ஆம் திகதி நாளைய கடையடைப்புக்கு வடக்கு மாகாணத்தில் இடம்பெறுகின்றதா? என்ற கேள்வி அனைத்து மக்களிடத்திலும் காணப்படுன்றது. வடக்கு மாகாணத்தில் உள்ள எந்தவொரு பொது அமைப்பினரும் நாளைய தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள கர்த்தால் தொடர்பாக எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.

இதனால் நாளை வடக்கில் ஹர்த்தால் இடம்பெடுமா என்ற அச்சம் பலர் மத்தியில் நிலவுகின்றது. இச் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் எமது செய்திப்பிரிவு வடக்கில் உள்ள சில பொது அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டு வினாவியது,

ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு எந்தவொரு அமைப்பினரும் எம்மிடத்தில் கோரிக்கை முன்வைக்கவில்லை, அத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்காக ஹர்த்தால் அனுஸ்டித்திருந்தோம்.

தயவு செய்து கர்த்தால் அனுஸ்டிக்குமாறு தெரிவிக்கும் தரப்பினர் பொது அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடுமாறும் இதுவரையில் வடக்கில் கர்த்தால் தொடர்பாக எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை என மேலும் தெரிவித்தனர்.