சடலம் ஒன்று மீட்பு
கொழும்பு – புத்தளம் தொடரூந்து வீதி லுனுவில மற்றும் தும்மோதர தொடரூந்து நிலையங்களுக்கு இடையில் நபர் ஒருவரின் சடலம் நேற்று காலை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
கிரிமெடியான பிரதேசத்தினை சேரந்த 31 வயதுடைய நபரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனைக்காக சடலம் சிலாபம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.







