இலங்கையில் தாயையும் கொலை செய்த கணவர்!!

685

கொலை

திஸ்ஸமஹாராமை – சந்துன்கம பகுதியில் தனது மனைவியையும், மனைவியின் தாயையும் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று காலை 9 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப முரண்பாடு ஒன்றின் காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில், கிராம சேவகராக பணியாற்றிய 25 வயதுடைய பெண்ணும், அவருடைய தாயாரான 54 வயதுடையவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, கொலைசெய்யப்பட்ட பெண்ணின் கணவரான 28 வயதுடையவர், இராணுவத்தில் பணியாற்றி பின்னர், அதிலிருந்து வெளியேறியவர் என்றும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.