இந்தியா வந்தது நியூசிலாந்தில் இறந்துபோன மாணவியின் உடல்!!

345

இறந்துபோன மாணவியின் உடல்

நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் இறந்துபோன இந்திய மாணவியின் உடல் கொச்சி விமான நிலையம் வழியாக அவரது சொந்த ஊரான கொடுங்கல்லூர் கொண்டு வரப்பட்டுள்ளது.

25 வயதான Ansi Alibava தனது கணவருடன் சேர்ந்து மேற்படிப்புக்காக நியூசிலாந்து சென்றுள்ளார். அங்கு, பகுதிநேரமாக சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்துக்கொண்டே தனது படிப்பை தொடர்ந்துள்ளார்.

தனது குடும்பத்தின் மீது அதிக பொறுப்பு கொண்டிருந்த இவர், துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பெண்கள் தொழுகை செய்யும் பிரிவில் இருந்துள்ளார். தீவிரவாதி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தபோது அவரசகால கதவினை திறந்துகொண்டு இவரது கணவர் தப்பித்து வெளியே வந்துவிட்டார், ஆனால் Ansi Alibava துப்பாக்கி சூட்டில் காயமடைந்து உயிரிழந்தார்.

இந்நிலையில், சம்பவம் நடைபெற்று 15 நாட்கள் கடந்துவிட்ட நிலையில்இவரது உடல் இன்று விமானத்தின் மூலம் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கூடிய விரைவில் தனது படிப்பினை முடிக்கவிருக்கும் இவருக்கு இப்படி நடந்துவிட்டதே என பெற்றோர் மற்றும் உறவினர்கள் கவலை கொண்டுள்ளனர்.