360 அவுஸ்திரேலியர்கள்
இலங்கைக்கு வருகை தந்திருந்த அவுஸ்திரேலிய குழுவினரின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். கல்கிஸ்ஸ கடற்கரை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் 360 அவுஸ்திரேலியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தில் 360க்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர். இந்து பசுபிக் வேலைத்திட்டதின் கீழ் நேற்று முன்தினம் கல்கிஸ்ஸ கடற்கரை பகுதி அவுஸ்திரேலியர்களால் சுத்தப்படுத்தப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் மாணவர்கள், அந்நாட்டு பாதுகாப்பு படை அதிகாரிகள், இலங்கை பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் சிலரும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இலங்கையில் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்காக சுத்தமான கடற்ரை ஒன்று அவசியம் எனவும், கல்கிஸ்ஸ கடற்கரையை சுத்தப்படுத்தியமை மகிழ்ச்சியான விடயம் எனவும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ஜோன் பிலிப் தெரிவித்துள்ளனர்.
இந்த வேலைத்திட்டம் மூலம் கல்கிஸ்ஸ கடற்கரையில் சுமார் இரண்டு கிலோமீற்றர் கரையோரப் பகுதி துப்பரவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.