நாட்டில் சட்டவிரோதமாக மின் வெட்டு : வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தகவல்!!

885

சட்டவிரோதமாக மின்வெட்டு

இலங்கை மின்சாரசபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்பொழுது அமுல்படுத்தப்படும் மின் வெட்டு சட்டவிரோதமானது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது. பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி மின்வெட்டு அமுல்படுத்தப்பட முடியாது என சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

ஒப்பந்த நிபந்தனைகளின் அடிப்படையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி மின் வெட்டு அமுல்படுத்தப்பட முடியாது எனவும், மின்சார சபையின் எதேச்சாதிகார நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால அது குறித்து எழுத்து மூலம் தமக்கு அறிவிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, மின்சார தடை தொடர்பில் இலங்கை மின்சாரசபை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.