லண்டனில் குத்திக்கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் குறித்து வெளியான தகவல்கள்!!

473

இலங்கைத் தமிழர்

லண்டனில் Pinner என்ற பகுதியில் இலங்கை தமிழ் நபரான ரவி என்பவர் குத்திக்கொலை செய்யப்பட்டது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை தமிழரான ரவி லண்டனில் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக Pinner பகுதியில் வசித்து வருகிறார். இவரது கடையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் கொள்ளை சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இந்நிலையில், திடீரென கடைக்குள் புகுந்த மர்மநபர்கள் அவரை கத்தியால் குத்தியுள்ளனர். கொள்ளையடிப்பதற்காக கடைக்குள் புகுந்த நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்திகுத்து காயங்குடன் உயிருக்கு போராடிய ரவி சுமார் 45 நிமிடங்களில் உயிரிழந்தார். Nikki Walker-Nash என்ற பெண்மணி ரவி குறித்து பகிர்ந்துகொண்டதாவது, Marsh Food மற்றும் Wine போன்றவற்றை ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று ரவியே வழங்கி வருகிறார்.

நான் ஒரு நாளைக்கு இரண்டு முறை அவரது கடைக்கு செல்வேன், அன்பாக சிரித்துக்கொண்டே என்னை வரவேற்பார். வழக்கம்போல நேற்று செல்கையில் சாலை அடைக்கப்பட்டிருந்ததை பார்த்து ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்பதை உணர்ந்துகொண்டேன்.

அதன்பின்னர்தான், இறந்துபோனது ரவி என்று தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். ரவி தனது கடையில் 5 நாட்கள் பணி செய்வார், அவர் இல்லாத நேரத்தில் அவரது உறவினர் இந்த பணியை மேற்கொள்வார்.

Lloyd Wood என்பவர் கூறியதாவது, உள்ளூர் பகுதியை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் ரவி மிகவும் பரீட்சியமானவர். அன்பான, மகிழ்ச்சியான மற்றும் கடின உழைப்பாளி என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும், இந்த கொலையினை நேரில் பார்த்தவர்கள் முன்வந்து புகார் அளிக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் சமீப காலமாக கத்திக்குத்து கொலைகள் அதிகரித்து வருகின்றது. இந்த கொலையுடன் சேர்த்து இதுவரை 29 கொலைகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.