நடிகர் சரத்குமார்
மக்களவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்திருந்த அக்கட்சியின் தலைவர் சரத்குமார் திடீரென அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளார்.
நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வரும் மக்களவை தேர்தலில் தனது கட்சி தனியாக போட்டியிடும் என தெரிவித்தார், ஆனால் கட்சியின் வேட்பாளர் பட்டியல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தை சரத்குமார் இரு தினங்களுக்கு முன்னர் சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு பேசிய சரத்குமார், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை செய்த பிறகு அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம்.
அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளேன். தொங்கு நாடாளுமன்றம் அமைந்துவிடக் கூடாது என்பதால் ஆதரவு அளிக்கிறோம் என கூறியுள்ளார்.