வெளிநாட்டில் உள்ள கணவனுடன் வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருக்கையில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணி!!

390

படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணி

அவுஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு விடுமுறையில் வந்திருந்த ரன்வித் கவுர் என்ற கர்ப்பிணி பெண்மணி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது கணவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Gold Coast பகுதியில் வசித்து வரும் ரன்வித் கவுன் என்ற பெண்மணி கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் திகதி இந்தியா வந்துள்ளார்.

மார்ச் மாதம் 22 ஆம் திகதி மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு திரும்புவதற்கு திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதி பஞ்சாப்பிலுள்ள Bagge Ke Pipal என்ற பகுதியில் தனது கணவரின் வீட்டுக்கு வெளியே நின்று கணவருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த சில மர்மநபர்கள் அவரை கடத்திசென்றுள்ளனர். கடத்தி சென்று 11 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இவரது சடலாம் கால்வாய் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட அன்றே கவுர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும் இந்த கொலையில் ஒரு பெண் சம்பந்தப்பட்டிருக்கிறார் என பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரன்வித் கவுரின் கணவருக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும்,பஞ்சாப்பில் ரன்வித் கவுர் கொலை செய்யப்பட்டபோது அந்த பெண்ணும் இந்தியாவில் இருந்ததாகவும், கொலை நடந்தஅடுத்தநாளே அவர் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் தெரியவந்துள்ளது,

தற்போது இந்த கொலை தொடர்பான விசாரணைக்காக அவுஸ்திரேலியாவிலுள்ள அவரது கணவரை பஞ்சாப் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.