பல முறை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்!!

516

ரவி கதிர்காமர்

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 54 வயதுடைய ரவி கதிர்காமர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பிரித்தானியாவின் பினர் நகரில் சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றை நடாத்தி சென்ற நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை காலை 6.30 அளவில் வர்த்தக நிலையத்தினை திறப்பதற்கு வருகை தந்த போதே அவர் இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். ரவி கதிர்காமர் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு பாதுகாப்பு துறையினர் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த கொலை சம்பவம் தொடர்பில் பொது மக்கள் தகவல் அறியும் பட்சத்தில் காவல் துறையினருக்கு தந்துதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் ரவி கதிர்காமர் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் குறித்த பகுதியில் நடமாடியமைக்கான காணொளியையும் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் வௌியிட்டுள்ளனர்.