க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது : 9413 பேர் 9A சித்திபெற்று வரலாற்று சாதனை!!

683

9413 பேர் 9A சித்தி

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை எழுதிய பரீட்சாட்திகளின் பெறுபேறுகள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு 9.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதே வேளை இம்முறை பரீட்சை எழுதிய பரீட்சாத்திகளில் 9413 பேர் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த சித்திகள் இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய சாதனை என தெரிவிக்கப்படுகின்றது.