இந்தியாவிலிருந்து கப்பலில் வந்த புதிய ரயில் பெட்டிகள்!!

812

புதிய ரயில் பெட்டிகள்

இந்தியாவிலிருந்து கப்பல் ஊடாக புதிய ரயில் பெட்டிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. S13 மற்றும் M11 ரக தொடருந்துகள் இன்று அதிகாலை இந்தியாவிலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த நிலையில் அவற்றை பாரம் தூக்கிகளைக்கொண்டு தரையிறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தரையிறக்கப்படும் தொடருந்துகளில் இரட்டை விளக்குகளைக்கொண்ட S13 தொடருந்தின் 14 பெட்டிகள் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.

இதேவேளை, இந்தியாவிடமிருந்து கட்டம் கட்டமாக தொடருந்துகளை கொள்வனவு செய்யவுள்ள இலங்கை தொடருந்துத்திணைக்களம், ஏற்கனவே முதலாவது கட்டமாக கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி ஒருதொகுதி தொடருந்துகளை நாட்டுக்கு கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.