இலங்கையில் கணவனை கொன்று விட்டு கோடாரியுடன் சரணடைந்த மனைவி!!

606

கோடாரியுடன் சரணடைந்த மனைவி

தனது கணவனை கோடாரியால் தாக்கி கொலை செய்த பெண்ணொருவர், அந்த கோடாரியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அனுராதபுரம் பரசன்கஸ்வெவ பிரதேசத்தில் நடந்துள்ளது. பரசன்கஸ்வெவ, அடுகெட்டியாவ போதி மவத்தை பகுதயில் உள்ள வீடொன்றில் இந்த கொலை சம்பவம் இன்று நடந்துள்ளது.

தச்சு தொழிலாளியான 43 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார். இந்த நபர் வேறு ஒரு பெண்ணுடன் கொண்டிருந்த கள்ள தொடர்பே கொலைக்கு காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலை சம்பவம் தொடர்பாக 35 வயதான மனைவியை கைது செய்துள்ள பொலிஸார் நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளனர்.