விபச்சார தொழிலுக்கு அனுப்பும் கும்பல்

கொழும்பில் இளம் பெண்களை ஏமாற்றி விபச்சார தொழிலுக்கு அனுப்பும் கும்பல் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. கொட்டாவை – மஹல்வராவ பிரதேசத்தில் அழகு கலை நிலையம் ஒன்றை நடத்தி செல்லும் நோக்கி இளம் பெண்களை ஏமாற்றி விபச்சார தொழிலுக்கு அனுப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

கஞ்சா, ஹசிஷ் போன்ற போதைப்பொருட்களுக்கு பெண்களை அடிமையாக்கி பல காலங்களாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையினை 38 வயதான பெண் மற்றும் 17 வயதான இளைஞனும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

பல பெண்களை ஏமாற்றி அவர்களை நுட்பமான முறையில் பணத்திற்கு விற்பனை செய்யும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர். பெண்களை கொள்வனவு செய்பவர்களின் கையடக்க தொலைபேசிகளுக்கு விருப்பமான பெண்களை தெரிவு செய்யுமாறு புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றது. அதற்கமைய தரகர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடும் பெண்ணுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்வதனை வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.

ஒரு இரவு தங்குவதற்கு ஒரு பெண்ணுக்கு 40000 ரூபாய் விலை நிர்ணயிக்கப்படுகின்றது. இந்த பணத்திற்கு பெண்களை பெற்று கொண்டதன் பின்னர் இந்த பெண்களுக்கும் கொள்வனவாளர்களும் போதைப்பொருள் வழங்கப்படுகின்றது. அதனை 17 வயதான இளைஞன் வழங்கி வந்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியினால் சில பெண்கள் இந்த கும்பலிடம் சிக்கிக் கொள்வதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் பொலிஸார் சுற்றிவளைப்பு ஒன்றையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




