தமிழ் மாணவியின் வரலாற்றுச் சாதனை

க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் 9A சித்திகளை பெற்று கேகாலை சாந்த மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தில் 55 வருடங்களுக்கு பின் டி லக்ஷிகா எனும் மாணவி சாதனை படைத்துள்ளார்.

மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த இப்பாடசாலையில் இம் மாணவியின் பரீட்சை முடிவால் பாடசாலைக்கு மட்டுமல்ல தமிழ் மொழி மற்றும் அப்பகுதிக்கும் மிகப் பெரும் பாக்கியம் என ஊர் மக்கள் கூறுகின்றனர்.

2018 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 661 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றது. அதில், 6 லட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சாத்திகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை இம்முறை பரீட்சை எழுதிய பரீட்சாத்திகளில் 9413 பேர் 9 ஏ சித்திகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




