ஒன்றரை மாதம் பட்டினி போட்டு இளம்பெண் கொலை : கணவன்-மாமியாரின் வெறிச்செயல்!!

315

இளம்பெண் கொலை

இந்தியாவின் கேரள மாநிலத்தில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை, ஒன்றரை மாதம் பட்டினி போட்டு கொலை செய்த கணவன் மற்றும் மாமியாரை பொலிசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த தம்பதி துளசிதாஸ்-விஜயலட்சுமி. இவர்களது மகள் துசராவுக்கும்(27), அதே பகுதியைச் சேர்ந்த சந்துலால்(30) என்பவருக்கும் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்த திருமணத்தின்போது பேசப்பட்ட வரதட்சணையை, பெண்ணின் தந்தை துளசிதாஸ் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்துலால் மற்றும் அவரது தாயார் இருவரும் துசராவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

கடந்த ஒன்றரை மாதமாக புதுப்பெண் துசராவின் நடமாட்டம் இல்லை. இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் துசராவை கருநாகப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனையில் சந்துலாலும், அவரது தாயாரும் சேர்த்துள்ளனர்.

அங்கு சிகிச்சைப் பலனின்றி துசரா இறந்தார். அதனைத் தொடர்ந்து, துசாராவின் சாவில் சந்தேகம் இருப்பதாக மருத்துவர்கள் பொலிசாரிடம் புகார் செய்துள்ளனர். அதன் பின்னர் சந்துலால் மற்றும் அவரது தாய் கீதாலால் ஆகியோரிடம் பொலிசார் விசாரணை நடத்தினர்.

அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர்கள் கூறுகையில், ‘போதிய வரதட்சணை கிடைக்காத ஆத்திரத்தில் துசராவை வீட்டில் அடைத்து வைத்து பட்டினி போட்டோம். திருமணத்தின்போது 60 கிலோ எடை இருந்தார்.ஒன்றரை மாதமாக தண்ணீர் மட்டுமே கொடுத்ததால் 40 கிலோ எடை குறைந்து, இறக்கும்போது 20 கிலோ எடை மட்டுமே இருந்தார். பட்டினி போட்டே கொலை செய்தோம்’ என்று விசாரணையில் ஒப்புக் கொண்டனர்.

துசராவுக்கு காலையில் ஒரு தம்ளர் சர்பத், மதியம் ஒரு தம்ளர் தண்ணீர், இரவு மீண்டும் ஒரு தம்ளர் சர்பத் மட்டுமே ஜன்னல் வழியாக இருவரும் கொடுத்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, தாய்-மகனை கைது செய்த பொலிசார் கருநாகப்பள்ளி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.