மகளுடன் சேர்ந்து தூக்கில் தொங்கிய பெற்றோர் : கதவை திறந்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

428

மகளுடன் சேர்ந்து தூக்கில் தொங்கிய பெற்றோர்

சேலம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் ரவிக்குமார் (45). இவரது மனைவி சாந்தி (35). இந்த தம்பதியினருக்கு ரம்யாலோஷினி என்கிற மகளும், தீனதயாளன் என்கிற மகனும் உள்ளனர்.

தீனதயாளனை மட்டும் நேற்று இரவு பாட்டி வீட்டுக்கு சென்று உறங்குமாறு ரவிக்குமார் கூறியுள்ளார். அங்கு உறங்கி எழுந்த தீனதயாளன் அதிகாலை தன்னுடைய வீட்டிற்கு திரும்பி கதவை தட்டியுள்ளார்.

நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் உறவினர்களை அழைத்து கொண்டு வீட்டின் கதவை உடைத்துள்ளார். அப்போது ரவிக்குமார் சேலையிலும், அவருடைய மனைவி மற்றும் மகள் கயிற்றில் தூக்கில் தொங்கியவாறே சடலமாக கிடந்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தீனதயாளன் கதறி அழ ஆரம்பித்துள்ளார். பின்னர் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.