பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள சம்பவம் : ஊரே சோகத்தில்!!

791

ஊரே சோகத்தில்..

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் 26 வயதுடைய தாய் மற்றும் 05 வயது சிறுவன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீடு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டனர். பலாங்கொடை – கபுவத்த – மஹவலதென்ன பிரதேச வீட்டில் வைத்தே இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முன்னர் தாயார் மூலம் மகனுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. பின்னர் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற போது உயிரிழந்த பெண்ணின் கணவர் வீட்டில் இருக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. தாய் மற்றும் மகன் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை என பலாங்கொடை காவற்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.