இலங்கை மக்களுக்கு ஓர் முக்கிய செய்தி : காத்திருக்கும் அதிர்ச்சி!!

1035

ஓர் முக்கிய செய்தி

அடுத்த மாதம் முதல் பகல் மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. எதிர்வரும் 5ஆம் திகதிமுதல் 15ஆம் திகதிவரை சூரியக் கதிர்வீச்சின் தாக்கம் நேரடியாக இடம்பெறவுள்ளமையினால் இவ்வாறு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.

எனவே, பொது மக்கள் வெப்பநிலையின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
தென்மாகாணத்தின் திக்வெல்ல, கெகனதுரு, கொட்டவில முதலான பிரதேசங்களுக்கு எதிர்வரும் 5ஆம் திகதி சூரிய கதிர்வீச்சுத் தாக்கம் நேரடியாக இடம்பெறவுள்ளது.

இதேநேரம், வட மாகாணத்திற்கு எதிர்வரும் 15ஆம் திகதி சூரிய கதிர்வீச்சுத் தாக்கம் நேரடியாக இடம்பெறவுள்ளது. தற்போது நிலவும் காலநிலை தன்மைக்கு அமைய, குருநாகல் மாவட்டத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

குருநாகலின் வெப்பநிலை சாதாரணமாக 32 பாகை செல்சியஸாக பதிவாகின்ற நிலையில், தற்போது 38.8 பாகை செல்சியஸ் அளவில் அங்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த வெப்பமான காலநிலை காரணமாக பொது மக்கள் அதிகளவில் நீரை அருந்த வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் அதிகளவில் நீரை அருந்துவதுடன், அதிகளவான நேரத்தை குளிப்பதற்கு செலவிடுவதன் ஊடாக சரும நோய்களை மற்றும் தொற்றுநோய்களைத் தவிர்க்க முடியும் என சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவர் தீபால் பெரேரா எமது செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.