இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் கொழும்பில் கைது!!

791

திமுத் கருணாரத்ன

இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான சமகால தலைவர் திமுத் கருணாரத்ன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளையில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். கின்சி வீதியில இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெறும் போது கிரிக்கெட் வீரர் மது போதையில் இருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடிபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவர் திமுத்து கருணாரத்னவை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொரளை, கின்ஸி வீதிப் பகுதியில் வைத்து திமுத்து கருணாரட்ன கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.