குப்பை அள்ளுதல்… இளநீர் வெட்டுதல்…. மக்களை கவரும் சீமானின் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான்!!

599

நடிகர் மன்சூர் அலிகான்

மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் வித்தியாசமான முறையில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் சீமானின் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திண்டுக்கல் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இதையடுத்து அந்த தொகுதியில் தொடர் பிரசாரம் செய்து வரும் மன்சூர் அலிகான் மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதிகளில் காலையிலேயே பிரச்சாரத்தை தொடங்கிவிடுகிறார். கட்சிக் கொடியுடன் 5 பேர் மட்டும் அவருடன் செல்கின்றனர்.

பிரசாரத்தின் இடையில் டீக்கடைக்குள் சென்று டீ ஆத்துவது, துப்புரவு தொழிலாளர்களிடம் கூடையை வாங்கி குப்பையை அள்ளுவது, அம்மியில் சட்னி அரைப்பது, இளநீர் வெட்டுவது, ஷூ பாலிஸ் போடுவது போன்ற விடயங்களை செய்து வருகிறார். மன்சூர் அலிகானின் வித்தியாசமான பிரசார முறை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.