மஹவ – விஜயபா தேசிய பாடசாலைக்கு அருகில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி சென்ற ரயிலிலேயே இவர் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பலியானவர் தலதாகம பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
சடலம் மஹவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன