இளம் குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டுவில் புத்தூர் – மீசாலை வீதியில் அதிகாலையில் விபத்து ஏற்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் 24 வயதான ரஜீவன் உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிடுகு ஏற்றியவாறு பயணித்த லாண்ட் மாஸ்ரருடன் பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




