17 வயது மகளை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தந்தை!!

601

கொலை செய்துவிட்டு நாடகமாடிய தந்தை

இந்தியாவில் 17 வயது மகளை கொலை செய்து உடலை எரித்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ஆர்த்தி (17). கல்லூரி மாணவியான இவர் சக மாணவர் ஒருவருடன் நட்பாக இருந்தார்.

அதாவது மாணவருக்கு போனிலிருந்து அடிக்கடி மெசேஜ் அனுப்புவது, அவருடன் பைக்கில் செல்வது என இருந்துள்ளார் ஆர்த்தி. ஆனால் இது ஆர்த்தியின் தந்தை சாய்கிண்டேவுக்கு பிடிக்காத நிலையில் மாணவருடனான நட்பை துண்டிக்க சொல்லி வற்புறுத்தினார். ஆனால் இதை கேட்காத ஆர்த்தி தனது நட்பை தொடர்ந்தார்.

இந்நிலையில் மகள் மீது ஆத்திரமடைந்த சாய்கிண்டே கடந்த 23ஆம் திகதி ஆர்த்தியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் தனது உறவினர்களான ராஜேந்திரா ஜகன்நாத் மற்றும் தியான்தேவ் ஆகியோருடன் சேர்ந்து ஆர்த்தி சடலத்தை எரித்து வீட்டருகில் போட்டுள்ளார்.

இதன்பின்னர் ஒன்றும் தெரியாதவர் போல தனது மகளை காணவில்லை என 24ஆம் திகதி பொலிஸ் புகார் அளித்தார் சாய்கிண்டே. இந்நிலையில் 25ஆம் திகதி பாதி எரிந்த நிலையில் கிடந்த ஆர்த்தியின் சடலத்தை அவரின் சகோதரி பார்த்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பொலிசார் இது தொடர்பாக 35 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவல் மற்றும் துப்பு அடிப்படையில் சாய்கிண்டே, ராஜேந்திரா, தியான்தேவ் ஆகியோரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.