திருமண நாளில் சைக்களில் வலம் வந்த மணமக்கள்!!

508

சைக்களில் வலம் வந்த மணமக்கள்

யாழ்ப்பாணத்தில் வலிகாமம் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் பின்னர் மணமக்கள் பழைய சைக்கிளில் வலம் வந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

என்ன காரணத்திற்காக இவர்கள் சைக்களில் வலம் வந்தார்கள் என்ற காரணம் தெரியவரவில்லை. சமூக ஊடகங்களின் கவனத்தைப்பெறுவதற்காக பலர் இவ்வாறான வித்தியாசமான செயல்களில் ஈடுபடுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

வடக்கின் பல பகுதிகளிலும் இது போன்று லாண்ட் மாஸ்டர், மாட்டு வண்டில் போன்றவற்றில் மணமக்கள் பயணிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே பதிவாகி சமூக ஊடகங்களிலும் பிரபலமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.