சிறுமி துஷ்பிரயோகம்

திருகோணமலையில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய வழக்கிற்கு சமூகமளிக்காத சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த நபரை இன்று ஆஜர்படுத்திய போதே இம்மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. திவுலப்பிட்டிய, கம்பஹா பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் சீனக்குடா பகுதியில் தொழில் செய்து வந்த நிலையில் அப்பிரதேசத்திலுள்ள 14 வயதுடைய சிறுமியை காதலித்து பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார். இது தொடர்பாக சீனக்குடா பொலிஸாரினால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சந்தேக நபர் வழக்கொன்றிற்கு சமூகமளிக்காது இருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.




