இரத்தினக் கல் தேடிச்சென்றவருக்கு ஏற்பட்டுள்ள நிலை!!

635

களு கங்கையில் நீரில் மூழ்கி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுகங்கையின் இரத்தினபுரி கிரியல்ல பிரதேசத்திலுள்ள ஹரணியாவக பகுதியிலேயே நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் இன்று காலை தனது சகாக்களுடன் சேர்ந்து இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த போது ஒட்சிசன் தாங்கிய கொம்பிரஷரின் உதவியுடன் நீரில் மூழ்கி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, குறித்த நபர் காணாமல் போயுள்ளதாக கிரியல்ல பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர் அவிசாவளை பிரதேசதத்தைச் சேர்ந்த என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காணாமல் போயுள்ளவரை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.