தாயை தவறாக பேசிய நண்பனை கோபத்தில் வெட்டிக்கொலை செய்த மகன்!!

304

வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டத்தில் தாயின் நடத்தை குறித்து தவறாக பேசிய நண்பரை வெட்டிக்கொலை செய்த மகன் தானாக சென்று பொலிசில் சரணடைந்துள்ளார்.

எப்போதும்வென்றான் அருகேயுள்ள கன்னக்கட்டை கிராமத்தைச் சேர்ந்த வேலனும், கண்ணனும் நண்பர்கள். இருவரும், ஒன்றாக உப்பளத்தில் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில், கண்ணனின் தாயாரின் நடத்தை குறித்து, வேலன் கேலி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் இரவு நேரத்தில் வேலனை அழைத்துச் சென்று, அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளான். கொலை செய்துவிட்டு தானாக காவல்நிலையத்தில் சென்று சரணடைந்து நடந்தவை குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.