தனிநாயகம் அடிகளார்
வவுனியா அகில இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் தமிழுக்கு தொண்டாற்றிய தனிநாயகம் அடிகளாரின் சிலை நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (04.04) பாடசாலையின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிரதி கல்வி பணிப்பாளர் எஸ்.அமிர்தலிங்கம் மற்றும் கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.மரியநாயகம் ஆகியோர் கலந்துகொண்டு தனிநாயகம் அடிகளாரின் சிலையை திறந்து வைத்தனர்.
நிகழ்வில் அதிதிகள் மாலை அணிவித்து பாண்ட் வாத்தியங்களுடன் பவனியாக அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.